எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Saturday, November 16, 2013
வீட்டுத்தோட்டத்தின் அவசியம் குறித்து பலருக்கும் தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது வரவேற்கத் தக்க ஒன்று. ஆனால் தகுந்த வழிகாட்டுதல் கிடைக்காமல் முயற்சி மேற்கொள்ளாமல் இருப்பவர் பலர். எனவே ஆர்வம் இருந்தும் தேவையான ஆலோசனைகள் கிடைக்க பெறாமல் இருப்பவர்களை உற்சாகப் படுத்தி வழிகாட்டி அவர்களையும் வீட்டுத்தோட்டத்தில் ஈடுபட வைப்பதே பசுமைவிடியலின் நோக்கம்.

பசுமைவிடியல் முகநூல் பக்கத்தில் இதுவரை பகிர்ந்து வந்த வீட்டுத் தோட்டம் டிப்ஸ் இனி இந்த தளத்தில் தொடர்ந்து வெளிவரும் படித்து   பயன்பெறுங்கள் , பலருக்கும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

வீட்டுத் தோட்டம் ஏன் அவசியம் என்பதற்கு  ஒரே ஒரு காரணம் சொன்னா உங்களுக்கு நன்றாகப் புரியும்...காய்கறிகளின் மீது மூட்டை மூட்டையாகக் கொட்டப்படுகிறது இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள். இவற்றால் விஷமாக மாறிய காய்கறிகளை உண்டு வரும் நம் ஆரோக்கியம்  கேள்விக்குறியாகி விட்டது !!? என்ன என்ன பாதிப்புகள் என தொடர்ந்து வாசியுங்கள்

இரசாயன பூச்சிக் கொல்லி தெளிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்
-----------------------------------------------------------------------------------------------------------------


உடனடி பாதிப்புகள்
------------------------------

நினைவிழத்தல் , தலைவலி , தலைசுற்றல், சோர்வு, வாந்தி
நாக்கு பிறழ்தல், சீரற்ற நாடித்துடிப்பு , காய்ச்சல், சுவாசபிரச்சனை, சீரற்ற இதயத்துடிப்பு, தோல் அரிப்பு, பருக்கள், வாயுத்தொல்லை,வயிற்றுப் போக்கு

நீண்டகால பாதிப்புகள்
---------------------------------

மூளைப் புற்றுநோய் ,பார்வை இழப்பு ,கண் புரைநோய், நுரையீரல்  பாதிப்பு, சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, ரத்தப் புற்றுநோய், பாலியல் கோளாறு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், மலட்டுத்தன்மை. (தகவல் உபயம்-பசுமை விகடன்)
                                                                                                   
எத்தனை விதவித மான நோய்கள் !!!??? மருந்து தெளிப்பவருக்கே இந்த கதி என்றால், பூச்சிக் கொல்லி மருந்தை உறிஞ்சி வளரும் காய்கறிகளை சாப்பிடும் நம் நிலை !!???? நினைக்கவே மிக அச்சமாக இருக்கிறது. வெளித் தோற்றத்தில் நன்றாக தெரியும் நம்முடைய உடலுக்குள் எந்த பாகங்களில் என்ன என்ன பாதிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவோ தெரியவில்லை. லட்சலட்சமாக பொருள் சம்பாதித்தும் நோயுற்ற உடலுடன் வாழ்வது கொடுமை !!

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இயற்கை முறைக்கு நாம் மாறியே ஆகவேண்டும். இயன்றவரை காய்கறிகளை மட்டுமாவது நம் வீட்டிலேயே வளர்த்து சாப்பிட்டு வரலாம்.


ஒரு வேளை உணவுக்காக ஹோட்டலில் சாதாரணமாக சராசரி 500 ரூபாய்  செலவு செய்கிறோம். இந்த அளவு தொகைகூட போதுமானது வீட்டுத்தோட்டம் அமைக்க...இடம்,மண், நேரம் என்ற வெற்று சமாதானம் இனியும் சொல்லாதீர்கள். மனம் இருந்தால் சிறிது இடத்தில் கூட நமக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்துக் கொள்ள முடியும். இதற்கு பல முறைகள் உள்ளன. மண் இல்லா தோட்ட முறையும் தற்போது வந்துவிட்டது . அப்பார்ட்மெண்டில் வசிப்பவர்கள் ஒன்றாக இணைந்து தோட்டம் போடா முயற்சிக்கலாம். பால்கனி, கைப்பிடி சுவர், வாசல், முற்றம், மொட்டை மாடி , ஜன்னல் ஓரம் என்று வெயில் படும் இடம்  போதும். டிவி முன்பு செலவு செய்யும் நேரத்தில் காலை மாலை என ஒரு அரைமணி நேரம் ஒதுக்கினால் கூட போதுமானது .

ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள், வழிகாட்ட நாங்கள் இருக்கிறோம் !!!

காய்கறி வளர்ப்பில் உற்சாகமாக ஈடுபடுங்கள்.....நோயற்ற ஆரோக்கியமான வாழ்வை வாழுங்கள் !!!

Happy Gardening !!

By  
பசுமைவிடியல்

0 comments: