எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Wednesday, March 28, 2012
இயற்கையை பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி வரும் பசுமைவிடியல் இயக்கம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி நதியை பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட இயக்கத்தில் ஒருவராக இணைந்து செயலாற்றி கொண்டு வருகிறது. ஆற்றின் கரையோர கிராம மக்களை சந்தித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் இவ்வியக்கம் அடுத்த மாதம் குறிப்பிட்ட பகுதியை சுத்தபடுத்த நேரடியாக களத்தில் இறங்க இருக்கிறது.

மேலும் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்வதை முக்கியமாக எண்ணி செயல்பட்டு கொண்டு வரும் சமயத்தில் சில வருந்தகூடிய சம்பவங்களை கேள்வியுற நேர்ந்தது. 

மணல் கொள்ளை 

மணல் அள்ளும் சமூக விரோதிகளால் அப்பாவி மனித உயிர்கள் பலியாவது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் மணல் அள்ளுவதற்கு ஐந்து வருடத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தும் திருட்டுத்தனமாக கொள்ளை நடந்து கொண்டு இருக்கிறது...இதை தடுக்கும் அரசு அதிகாரிகள், பொது மக்கள் தாக்கபடுகிறார்கள்...அதிலும் சமீபத்தில் திருநெல்வேலியை அடுத்த திசையன்விளை அருகேயுள்ள மிட்டாதார் குளத்தை சேர்ந்த சதிஷ்குமார் என்ற இளைஞர் மணல் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டு விட்டார்.




அந்த ஊர்காரர்கள் இணைந்து ஒரு காவல் குழுவை அமைத்து மணல் கொள்ளை நடப்பதை கண்காணித்து வந்துள்ளனர். சம்பவத்தன்றும் அவ்வாறு இரவில் காவலுக்கு சென்ற சதிஷ்குமாருடன் சேர்ந்து சிலரும் மணல் லாரியை தடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். லாரியை மேலும் செல்ல விடாமல் தடுத்து நின்ற சதிஷ்குமாரின் மீது சற்றும் எதிர்பாராத நேரத்தில் லாரியை ஏற்றி கொன்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டனர். 

அவரது தந்தை வின்சென்ட் மகனுடன் சேர்ந்து சென்றிருக்கிறார், அவரது கண்முன்னால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாத அவர், " எனது குடும்பமே அவனை நம்பி தான் இருந்தது...இப்போது அவனை இழந்து நாங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிட்டோம் இருந்தாலும் இதுக்கு பிறகாவது இந்த ஊரில் மணல் கொள்ளை நடக்காமல் அரசு பார்த்து கொண்டால் போதும். இயற்கையை பாதுக்காக்க தன் உயிரை கொடுத்த என் மகனின் ஆசை அப்போதுதான் நிறைவேறும் " என உருக்கமாக வேண்டிகோள் விடுத்திருக்கிறார்.  (நன்றி - பத்திரிக்கை செய்திகள் )

இயற்கையை காப்பதற்காக தன் உயிரை கொடுத்த சதீஷ் குமாருக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகளை செலுத்துகிறோம். 


சதிஷ்குமார் ஒருவரின் வருமானத்தை நம்பி உடன் பிறந்த 4 தம்பியர், ஒரு தங்கை மற்றும் பெற்றோரும் இருந்திருக்கின்றனர். அரசாங்கத்தின் நிவாரணம் ஏதும் இதுவரை கிடைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் இவர்களின் குடும்பத்துக்கு உதவுவது சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களின் கடமை என உணருகிறோம்.

கரம் கோர்க்கிறோம்

பணம் இத்தகைய உயிர் இழப்பிற்கு ஈடு ஆகாது எனினும் அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு சிறு உதவியாக இருக்கும், தவிர மகனை இழந்தாலும் நம்மை போன்றோரின் ஆறுதல் அவர்களுக்கு வாழ்க்கையின் மீது இன்னும் அதிக பிடிப்பை கொடுக்கும். நாட்டிற்காக பாடுபடும் நல்ல உள்ளங்கள் சோர்ந்துவிட கூடாது, அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்க இது போன்ற செயல்கள் உதவ கூடும்.

ஆதலால், 

இயன்றளவு பொருளை திரட்டி சதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு வழங்குவது என முடிவு செய்துள்ளது பசுமைவிடியல் இயக்கம். 

திரட்டப்படும் தொகை சதிஷ்குமாரின் உடன்பிறந்தவர்களின் படிப்புக்கும், எதிர்காலத்திற்கு உதவும் வகையில் அவர்கள் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்துவிடவேண்டும் எனவும் ஏற்பாடு செய்ய இருக்கிறோம் என்பதை ஒரு செய்தியாக இங்கே பகிர்கின்றோம்.

இது சம்பந்தமான உங்களின் ஆலோசனைகளையும், கருத்துக்களையும்,   Admin@pasumaividiyal.org  என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உதவி செய்ய விரும்பும் நண்பர்களும் இதே முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். 

0 comments: