மின்னஞ்சலில் பசுமை
பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க
முகப்புத்தகத்தில்
Followers
Monday, March 26, 2012
தாமிரபரணி பாதுகாப்பு இயக்க ஆலோசனை கூட்டம் முக்கூடல் ஆற்றங்கரை முத்துமாலையம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு துணைத்தலைவி விஜயா தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் கவுசல்யா முன்னிலை வகித்தார். செயலாளர் அய்கோ வரவேற்றார். கூட்டத்தில் பேரூராட்சி தலைவர் லட்சுமணன், துணைத்தலைவர் ஜெரால்டு, ஆட்டோ சங்க தலைவர் சேட், செயலாளர் போஸ்கோ, குகன்ராஜ், விவசாய கூடமைப்பு செய லாளர் தேவசகாயம், நெல்லை மாவட்ட பழைய இரும்பு, பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க தலைவர் கணேசன், தென் பொதிகை பரணி அறக்கட்டளை நிறுவனர் கமால், ஜெரின், பொன்பசுங்கிளி உட்பட பலர் பேசினர்.
மணல் தோண்டிய மரண பள்ளங்களில் விழுந்து குளிக்க வருவோர் உயிரிழக்காமல் இருக்கவும், ஆற்றில் வாகனங்களை கழுவாமல் இருக்கவும் எச்சரிக்கை பலகை வைக்கவேண்டும். ஆற்றில் மாட்டு வண்டிகளில் அள்ளப்பட்டு பின் மினி லாரிகளுக்கு மாற்றப்படும் மணல் அதிரடியாக கடத்தப்படுகிறது. இதை வருவாய் துறையினர் கட்டுப்படுத்த வேண்டும். மேலும், இங்குள்ள ஆலைகளுக்கு அளவுக்கதிகமான தண்ணீர் விதிமுறைகளை மீறி குளங்களை உடைத்து எடுத்துச்செல்லப்படுகிறது. ஆலைக்கான தண்ணீர் அளவை தெரிவிப்பதுடன் மீட்டர் மூலம் அளந்து வழங்க பொதுப்பணித்துறையும் குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்கவேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் ஜோசப் நன்றி கூறினார். கூட்டத்துக்கான ஏற்பாட்டை நெல்லை பல் நோக்கு சமூக சேவா சங்க பணியாளர்கள் சாந்தா, ஜோதி, அந்தோணி லூர்து ஆகியோர் செய்தனர்.
இது குறித்த நாளிதழ் செய்தி:
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
இயக்கத்தின் பணி சிறக்கட்டும் ...