எங்களுடன் இணைய

மின்னஞ்சலில் பசுமை

பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க

முகப்புத்தகத்தில்

Followers

Tuesday, March 13, 2012
சென்னையை அடுத்த குன்றத்தூர் போகும் வழியில் உள்ள கொளப்பாக்கம் என்ற  ஊரில் கடந்த ஞாயிற்று கிழமை (11-03-2012) அன்று பசுமைவிடியல் இயக்கம் மரம் நடுவிழா நடத்தி 50 மரக்கன்றுகளை நட்டது. காலனி குடியிருப்போர் சங்கத்தினர், நண்பர்கள் துணையுடன் பசுமைவிடியலின் நிர்வாக இயக்குனர் திரு.செல்வகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் திரு.கே ஆர்.பி.செந்தில் இருவரின் முயற்சியின் பேரில் நல்ல முறையில் மரகன்றுகள் நடப்பட்டது.



காலனி குடியிருப்புவாசியினர், உள்ளூர் நண்பர்கள் மற்றும் FFF நண்பர்கள் திரு .வசந்தகுமார் தனது நண்பருடன் வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். குடியிருப்புவாசிகளின் ஆர்வம் இத்துடன் முடிந்துவிடவில்லை, அனைவரும் ஒருமித்த குரலில், 'இன்னும் இங்கே அதிக மரங்களை நட்டு இந்த இடம் முழுவதையும் பசுஞ்சோலையாக மாற்றவேண்டும்' என்ற கோரிக்கை ஒன்றையும் வைத்து ஒரு வீட்டிற்கு இரண்டு மரக்கன்றுகள் என அதனை நாங்கள் பாராமரித்து கொள்கிறோம் என்றனர்.  அதனை மகிழ்வுடன் ஏற்றுகொண்ட பசுமைவிடியல் நிர்வாகத்தினர் அதற்கான ஏற்பாட்டை விரைவில் தொடங்குவதாக உறுதி அளித்தனர்.



திரு.செல்வகுமார் அவர்கள் மரக்கன்றுகளை நட்டு முடித்ததும், சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றியும், மரங்களை பராமரிப்பதையும் பற்றியும் அவர்களிடம் விளக்கி கூறினார். அனைவரின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு அங்கிருந்து திரும்பியது பசுமைபோராளிகளின் குழு.

'மழை மரக்கன்று'கள் (Rain Tree)நடப்பட்டன. இந்த மரத்தின் சிறப்பு என்னவென்றால், பகல் நேரத்தில் தனது மர பட்டைகளிலும், இலைகளிலும் ஈரபதத்தை  சேமித்து வைத்துகொண்டு இரவில் தூறல் போல உதிர்க்கும். இயன்றவரை பூமியை குளிர்விக்கும் தன்மை பெற்றது. நடும் மரங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் மரக்கன்றுகள் தெரிவு செய்யபடுகிறது. நல்ல மரங்கள் எவை என ஒரு பட்டியல் தயார் செய்து அதனடிப்படையில் மர கன்றுகளை வாங்கவேண்டும் என முடிவு செய்துள்ளோம்.



இங்கே நடைபெற்ற இந்த மரம் நடுவிழா ஒரு ஆரம்பம் தான். விரைவில் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரே நேரத்தில் பலநூறு மர கன்றுகளை நடுவதாக இருக்கிறோம். அதற்கான திட்ட மதிப்பிடல், செயல் திட்ட வடிவமைப்பு தற்போது நடைபெற்றுகொண்டிருக்கிறது என்பதை ஒரு செய்தியாக சொல்லி கொள்கிறோம்.

மரம் வளர்ப்போம் ! மழை பெறுவோம் ! 

0 comments: