மின்னஞ்சலில் பசுமை
பசுமை விடியல் செய்திகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் படிக்க
முகப்புத்தகத்தில்
Followers
Thursday, January 12, 2012
வெட்டாதே...!
11:20 AM
காடு மலை எங்கும் பசுமை
மரம், செடி, கொடிகள்
மனிதனுக்கு மூத்த குடிகளாம்
நேற்று வந்த, இவன் வாழ
வெட்டுகிறான் அவற்றை...
யார் கொடுத்த உரிமை இது?!
வெட்டி அழித்தப்பின்
இன்று
கண்ணீர் விடுகிறான்
விரைந்து மரங்களை நடுகிறான்...
பரிகாரம் தேடியா
அதன் மீதான அக்கறையா
நிச்சயமாக இல்லை
தனக்கு பாதகம் ஆகிவிட்டதே
என்ற அச்சத்தினால்...
இடம் கொடுத்தது மண்
நீர் வார்த்தது வானம்
ஒளி பாய்ச்சியது கதிரவன்
காற்று பறக்கடித்தது
பறவை எச்சமிட்டது
விழுந்தன விதைகள்
முளைத்தன மரங்கள் !
ஏ மனிதா !
நீ என்ன செய்தாய் ?!
ஒரு மரம் நடும்முன்
நூறு மரம் வெட்டுகிறாயே..
முதலில்
வெட்டுவதை நீ நிறுத்து
நடுவதை மரங்களே
பார்த்துக்கொள்ளும் !!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நன்றாக உள்ளது !
@@ shunmuga...
வருகைக்கு நன்றிகள் அண்ணா